10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம்
1978 -
2011
மாதகல், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பத்து ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும்
உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில்
நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்