Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 FEB 1948
இறப்பு 29 APR 2023
அமரர் நவரத்தினம் ராஜகுமாரி 1948 - 2023 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் ராஜகுமாரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிருத்திய நிகழ்வுகள் எதிர்வரும் 27-05-2023 சனிக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

முகவரி:
இல.95/2 உதயநகர் மேற்கு, கிளிநொச்சி

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குட்டி - பேரன்
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.