யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயல், கொழும்பு மொறட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜதேசிகர் சிதம்பரநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனது ஆசானின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.