

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயல், கொழும்பு மொறட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜதேசிகர் சிதம்பரநாதன் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜதேசிகர் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வன்(உதவித்திட்டமிடல் பணிப்பாளர்), செந்தில்செல்வன்(உதவிப்பதிவாளர்), உமாநிதி(ஜேர்மனி), சிவச்செல்வன்(களஞ்சியக்காப்பாளர்), திருச்செல்வன்(மருந்தகவியலாளர்), தயாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதாம்பாள், கோமதி, கருணைரத்தினம், சத்தியா, காயத்திரி, றஜனிகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உஷாந்தினி, லோஜிதா, வேதினி, யுகேஸ், அருணன், கஸ்தூரி, கலாகரன், சேதுசன், அச்சயன், அபிரதன், தனேந்திரன், லதுமிதா, கயல்விழி, துலாஞ்சலி, கவினி, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தமிழ்விழி, தேனுகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கிராம்புவில் முருகமூர்த்தி கோவிலடி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆசானின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.