1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பவளராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு
சென்றாய் அம்மா!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உனக்கு
என்றும் மனம் வராதே!
நான் காணும் தெய்வம்
நீதானம்மா
தாயைப்போல்
தெய்வம் இங்கு ஏதம்மா!
உலகத்தில் தாயின்றி யாரேனுமா?
உயிரின்றி உடல்மட்டும் நடமாடுமா?
நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
உன் வயிற்றுக்குள்
பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மகன் - தயாபரன்