

யாழ். கோண்டாவில் கிழக்கு ஞானபைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட நல்லநாதன் இரத்தினேஸ்வரி அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(இத்தாலி), காலஞ்சென்ற இராசினி, சிவலோகநாதன்(புத்தளம்), சிவநேசன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநேசன் சுஜிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
இரஞ்சித்(பிரான்ஸ்), தருண், விதுஷிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2021 மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லையடி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுகந்தம் வீசி வந்த தென்றலும் ஒரு கணம் நின்றது
அமைதி உருவம் மறைந்த செய்தி இன்னும்
எங்கள் மனங்களில் பதிய மறுத்தது
உறவுகள் பரிதவித்து நின்றருக்க
பாதி வழியினிலே தருணம் பார்த்திருந்தே
தட்டிப் பறித்து விட்டான் காலன் என் செய்வோம்? இனி
என் செய்வோம்? வேதனைத்தீயில்
மெழுகாய் உருகி உறைந்து விட்டோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்..