
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா முருகேசு அவர்கள் 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு கடைசி மகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வசந்தராணி அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இலச்சம்மா, இளையபிள்ளை மற்றும் நாகம்மா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், அமிர்தலிங்கம், நல்லையா, மகேஸ்வரி மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் முருகன் கோவிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 02:00 மணியளவில் பெரியவிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.