Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 01 MAR 1947
விண்ணில் 14 FEB 2025
திருமதி நாகேஸ்வரி குணரட்ணம்
வயது 77
திருமதி நாகேஸ்வரி குணரட்ணம் 1947 - 2025 நல்லூர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளை, இருபாலை மற்றும் ஜேர்மனி பேர்லின் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி குணரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

விரல் பிடித்து பள்ளி சென்றோம் உன்
குரல் கேட்டுக் குதுகலித்தோம்
படிப்படியாய் வளர்த்தெடுத்து
பட்டங்களும் பெற வைத்து
விட்டுவிட்டு சென்றுவிட்டாய்
அம்மா எம் இதயம் வலிக்கிறது

என்னென்ன ஆசைகளை உன்
மனதினுள் பூட்டி வைத்தாய்
எண்ண எண்ண எம் மனது
வேதனையில் துடிக்கிறது

கண்முன்னே நீங்கள்
காணாமல் போய் விடினும்
எம்மிதயத்தில் உங்கள் முக,
என்றென்றும் உயிர் வாழும்

உயிர் தந்த உறவே!
காணிக்கை கேட்காத தெய்வம் நீ!
கண்ணீர்ப் பூக்களால்
அர்ச்சிக்கின்றோம் அம்மா!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னர் 26-03-2025 புதன்கிழமை அன்று மதிய போசன நிகழ்வு நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.