யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகையா செல்லையா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
31 ம் நாளில் உங்கள் நினைவோடு ஐயா
எங்கள் வாழ்வை சிறந்த நாட்களாக்கி வழிகாட்டிய எங்கள்அன்புத்தந்தையே
தெய்வமே எங்கள் ஐயா!
எத்தனை நாட்கள்
எத்தனை நாட்கள்
கரைந்தாலும்
நீங்கள் எங்களுக்காக தந்த
நாட்கள் நகரவே போவதில்லை!
உங்கள் நெஞ்சோரமாய் அணைத்து அணைத்து
நாட்கள் நகரவே போவதில்லை!
உங்கள் நெஞ்சோரமாய் அணைத்து அணைத்து
வளர்த்தபிள்ளைகள் நெஞ்சோர கண்ணீரோடு!
என்னும் கொஞ்ச ஆண்டுகள் எம்மோடு
கெஞ்சியே உன்னோரம் ஓடி வந்தோம்!
ஐயாவுக்கு ஒன்றுமில்லை சொல்லி
ஐயா நீ மூச்சணைத்து போனாயோ!
எமக்கு மூச்சுத் தந்தவரே
உலகை எமக்கு தந்தவரே
உங்களை தினம்
தினசரி நினைக்கும்
எங்கள் கண்கள்,நெஞ்ச நனைதலோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை
பிராத்திக்கின்றோம்!
வத்திராயன் வடக்கு அன்னாரின் இல்லத்தில் 24-12-2021 வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு 31 நாள் நினைவஞ்சலி செய்யப்படும்.