1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகேஷ்வரி இராஜரட்ணம்
வயது 90

அமரர் நாகேஷ்வரி இராஜரட்ணம்
1930 -
2020
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
27
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 04-11-2021
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து
ஓராண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?
கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும் என்றும்
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
தாயாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குமரன் அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்