4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகேசு நாகேந்திரம்பிள்ளை
(சொக்கன்)
வயது 70

அமரர் நாகேசு நாகேந்திரம்பிள்ளை
1950 -
2021
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
66
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடகாகவும், பிரித்தானியா Manchester ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேசு நாகேந்திரம்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
ராஜினி, மாலினி, யாழினி மற்றும் குடும்பத்தினர்