யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புன்னகை பூத்த முகம்
பேரெழில் கொஞ்சும் முகம்
வெள்ளைமனம், பிள்ளைகுணம்
கொண்டவளே எம் அம்மா!
கலைகளின் இருப்பிடமே
கருணைமனம் உள்ளவளே
பூவிலும் மெல்லியவளே!
இனி அம்மா என்றழைக்க
யாருமில்லை எமக்கு
அனைத்தும் இழந்ததுபோல்
உணர்கின்றோம் அம்மா!
நீ இல்லாத இவ்வுலகம்
எமக்கும் நிரந்தரம் இல்லை
எனினும் உன் பாசமுகம்
பாராமல் பரிதவிக்கின்றோம் நால்வரும்,
மாதங்கள் நூறு ஆனாலும்
மறக்க முடியாது உன் நினைவை