1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகரத்தினம் நந்தகுமார்
1962 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் நந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.
அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய் இருந்து
நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!
இதை எப்படி தாங்குவோம் அப்பா...
உங்களின் இழப்பைத்
தாங்க முடியாமல் தவிக்கும் நாங்கள்
உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு
என்றென்றும்
நீங்கள் மறையமாட்டீர்கள் அப்பா...
தகவல்:
குடும்பத்தினர்