Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JAN 1938
இறப்பு 03 FEB 2019
அமரர் நாகராசா கண்மணி 1938 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா கண்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ

ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்...

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 23-01-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம்  தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்