Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JAN 1938
இறப்பு 03 FEB 2019
அமரர் நாகராசா கண்மணி 1938 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா கண்மணி அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வடிவேல், கனகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, கணேசலிங்கம், சண்முகலிங்கம், இராமலிங்கம், காலஞ்சென்ற அன்னலிங்கம், காசிலிங்கம், நாகேஸ்வரி, சுந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயராணி, ரமணி, சரோஜினி, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, நாகம்மா, யோகம்மா, நாகலிங்கம், பரமலிங்கம், மதியாபரனம், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, ஐயம்பிள்ளை, தர்மலிங்கம், செல்லம்மா, குணம், சங்கரப்பிள்ளை, சிவபாக்கியம், யோகம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பிராங்கிளின், ரேவதி, நாவேந்தன், யாமினி, சாளினி, சாதனா, மதுஷன், மதுஷா, கஜன், டெனிஸ், டினேஷ், அனோஜன், அபிராமி, அனுஷயா, கனுஷயா, சுவேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜொனத்தன், டேனிசன், கிருஷ்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இல. 83 ஜிந்துப்பிட்டி வீதி கொழும்பு- 13 எனும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் 07-02-2019 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர்  பி.ப 03:00 அளவில் பொறளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்