யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாவும், கலட்டி இராமநாதன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் சிவஞானம் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவளக்கொடி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தரூபன்(இலங்கை), சாந்தினி(இலங்கை), ஜெயரூபன்(பிரித்தானியா), ஜெயந்தினி(கனடா), சிவரூபன்(பிரித்தானியா), கஜரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஜெயகெளரி, சுகுமாரன், எழிலரசி, அருட்செல்வன், மிதுனாளினி, மடோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சிவலிங்கம் மற்றும் கனகமணி(கனடா), சிவானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி(இலங்கை), இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானம்மா, கந்தசாமி, சரஸ்வதி, தங்கேஸ்வரி, பரமேஸ்வரி, மகாராஜா, நாகேஸ்வரி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஷ்ணுயா, துசியா, சானுகா, வனோஜ், நிவேஸ், மானஸ்வி, கரிகாலன், பவன்னா, அர்ச்சயா, அகல்யா, சாயுரி, நிவேதி, சேயுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இராமநாதன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, ஏழாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஏழாலை மேற்கு உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.