மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மாமுனையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Leyton ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து துரைசிங்கம் அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சிவக்கொழுந்து (இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துரைசிங்கம் பாலராணி (இங்கிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்சினி, யோகேஸ், இந்துஜன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
பொன்ராசா சிவகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
வருண், அன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்