5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கச்சாய் பாலாவி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சின்னம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-04-2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஐந்து ஆண்டு அகன்றே
நின்றாலும் அழியாத
நினைவலைகள் எம் அகத்தில்
நின்று ஆழத்திலே வாட்டி
வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக
இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மகராசா குடும்பத்தினர்