யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அம்மா நீங்கள் இருக்கும் வரையும்
வாழ்ந்தோம் எல்லோரும் அழகாக
அம்மா நீங்கள் விடைபெற்ற பின் அழுகை மட்டுமேவரவாக
அம்மா அம்மா இருந்தாலே சொர்க்கம்
தெரியும் வரவாக
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
எல்லாம் இங்கே வலியாக...
அழகழகாக ஆளாக்கி உலகாக்கிய
அன்னையே
ஆனந்தமாக படுத்துறங்க மடிதரும்
திண்ணையே
அகிலமே சேர்ந்து தொழுகின்றோம்
உம்மையே
ஓம் சாந்தி....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.