Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 APR 1938
மறைவு 25 MAY 2020
அமரர் நடராசா இந்துமதி 1938 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், செட்டியகுறிச்சி பூநகரி, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா இந்துமதி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம் செல்லப்பா, நன்னித்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜினி, இந்துராசா, சித்திரா, காலஞ்சென்ற கலியுகராசா, கண்ணன், சுபிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரசரட்ணம், ஈஸ்வரி, இந்துராணி, வதனம் , ராணி, பத்மலோஜினி, அருந்திரகுமார், ஜெயமலதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருள்ராஜசிங்கம், இராசேஸ்வரி, சிவலோகநாதன், மாலா, யோகினி, இராஜகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைச்சாமி(ஆசையா), ராசாத்தி ஆகியோரின்  பாசமிகு மைத்துனியும்,

நிவாஷினி, சன்சயன், சன்சயனி, தக்சா, கதிர்வாசன், றஜன், சசி, அகி, மதுசன், நிவேதன், சீனுஜன், சிந்துஜன், சிந்தவி, ராகவி, யாதவி, சுவீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷியாம், சுவேயா, சஞ்சா, சிறிஜெய், சாயா, சாறா, அரிஸ், அரீன், அரிசா, மதுரன், லியா, சின்ரியா, அதிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரது குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்