யாழ். கொக்குவில் கிழக்கு 103/10 பிறவுன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா நாகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதே அம்மா,
மூன்ராண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எம்மைக்கடந்து செல்லும் காலமெல்லாம்
உம் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.