யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நாகேந்திரா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(J.P) வள்ளிநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிருபா அவர்களின் அன்புக் கணவரும்,
விதூஷனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஸ்கந்தரூபா அவர்களின் அன்பு மாமனாரும்,
அபிர்நயா அவர்களின் பாசமிகு பேரனும்,
செல்வராணி, இந்திராணி, ஜெயராணி, யோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லோகராஜா, இராதாகிருஷ்ணன் மற்றும் ஜெயந்தசதாநாயகன், காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிதரன், தயாபரன், தர்மினி, லோகினி, Dr.கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் களுபோவிலை ஜெயரட்ண மலர்ச்சாலை(292, Hospital Road, Kalubowila) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 01.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94112598900
- Mobile : +19058179995
- Mobile : +12896602994
- Mobile : +14163912597