யாழ். அச்சுவேலி தம்பாளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அற்புதராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று 09:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று அஸ்தி கரைக்கப்படும் தொடர்ந்து 31-12-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
பிரதான வீதி,
மகாறம்பைக்குளம்,
வவுனியா
Deep condolences