Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 AUG 1948
இறப்பு 27 AUG 2019
அமரர் நடராஜா அருளானந்தசிவம் (அருள்)
முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி- இலங்கைப் போக்குவரத்துச் சபை(Former Depot Inspector- CTB), கட்டட ஒப்பந்தக்காரர்
வயது 71
அமரர் நடராஜா அருளானந்தசிவம் 1948 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா அருளானந்தசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை !

ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: குடும்பத்தினர்