

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். ஜேர்மனி Leinfelden-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் ஸ்ரீகாந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் திருவிளக்கின் ஒளிக்கீற்றே, அணைந்தீர் ஐயா, அதிர்ந்தோம்,
அலறினோம், அல்லலுற்றோம் ஆறுதலளிக்க ஆண்டவனே
அருள் புரிவாயாக என்று இறைவனை வேண்டி நின்றோம்
அன்பு, அரவணைப்பு, அமைதி, அரும்பெரும் பொருளாக
மதித்த மானிட ஜென்மம். சிறீகாந்தன் என்ற பெயருக்கு
களங்கமற்றவராக வாழ்ந்த செம்மல் ஆணவம், கர்மம், மாயை அனைத்தையும்
நீக்கி ஆண்டவனிடம் கட்டுண்ட பண்பின் சிகரம், பாசத்தின் உறைவிடம்,
பகுத்தறிவாளன், என்ற நாமத்துடன் யேர்மனியில்
1991இல் பலராலும் பாரட்டப்பட்டவர்.
ஆற்றலுள்ளவர் ஆடம்பரத்தை விரும்பாதவர், ஆவேசம்கொள்ளாதவர்
ஆத்திரமடையாதவர் ஆறுகள் பல கடந்து வந்து சுறு சுறுப்புடன் சுற்றம் சூழலைப்
பேணித் தூயவனாகத் திகழ்ந்தவர் இளம் வயதில் இறைவனை
சென்றடைவார் என்று எதிர்பார்க்கவில்லை. எமது குடும்பத்தார் வாழ்வில்
மறக்கமுடியாத துயரம் தாங்கமுடியாத வேதனையும் அடைகின்றோம்.
மனநிறைவான பண்பான, அன்பான அறிவாளன், ஆற்றலுள்ள ஆணழகன்,
இறைபக்தி நிரம்பிய இன்பச்சுடர், இரக்கம், நேர்மை, பொறுமை, காருண்யம்,
ஆன்மீகத் தொண்டு இவை அனைத்திற்கும் அதிபதியாகி பேரோடும்
புகழோடும் பெரும் செல்வத்தோடும் வாழ்ந்த பெருமைமிக்க
புண்ணியவாளனை இழந்து தவிக்கின்றோம்.
உம் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.