யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஓர் திங்கள் ஆனதுவோ...
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா...!அப்பா...! என்றழைத்த
எம் உதடுகள்
இன்னுமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
அன்பான பேச்சும், புன்னகையும்
எம் நெஞ்சில் இன்னமும்...
31 நாட்கள் ஆகியென்ன
அழுது புரண்டென்ன
மறைந்து போன எம் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ...!
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் இழப்பினை ஏற்றுக்கொள்ள முடியாமல்
கண்ணீரில்த் தத்தளிக்கும் எம் விழிகள்!!
எம் குடும்பத் தலைவரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ந.ப 12:30 மணியளவில் நடைபெறவிருப்பதால் அத்தருணம் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.