Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 APR 1952
இறப்பு 11 AUG 2025
திரு முத்துக்குமார் நாகரட்ணராஜா (நவம், மாமா)
வயது 73
திரு முத்துக்குமார் நாகரட்ணராஜா 1952 - 2025 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமார் நாகரட்ணராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 கடந்தாலும்
 ஆறிடும் உங்கள் நினைவலைகள்!
 நேற்றுப் போல் எல்லாம் எம்
 நெஞ்சோடு நினைவிருக்க
 காற்றுப் போல் கண்களுக்கு
 தோன்றாமல் நிற்கின்றீர்தோற்றுப் போனது எம்
 எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
 இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள் விடைசொல்ல
ஒரு நிமிடம் வாரீரோ...?
 விளையாட்டாகினும் கூட சில
மணித்துளிகள் விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும் கடைசி வரை
உங்கள் நினைவு எம் நெஞ்சை விட்டு அகலாது!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 10-09-2025 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள்
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.