Clicky

தோற்றம் 22 APR 1933
மறைவு 11 JUN 2021
அமரர் முத்தையா பத்மநாபன்
B.Sc- St. Paul's Calcutta University, DipEd(Sri Lanka), GCE(O/L)- மாணவர் பெளதிகம் பாடப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர், அதிபர்- அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், அதிபர்- அச்சுவேலி Christian College, அதிபர்- யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர், Sokoto state Nigeria, இளைப்பாறிய- பௌதீக / கணித ஆசிரியர் London
வயது 88
அமரர் முத்தையா பத்மநாபன் 1933 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr K. S Thiraviyarajah 20 JUN 2021 United Kingdom

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் பெளதிகவியல் இருபது வருடங்களுக்கு மேலாக படிப்பித்த ஆசான் ஆசிரியர் மு.பத்மநாதன் காலமானார் என்ற செய்திஎன்இருதயத்தை தாக்கியது. கிட்டத்தட்ட 1952 ம் ஆண்டிலிருந்து 1973ம்ஆண்டு வரை படிப்பித்தவர். ஒரு கணம் சிந்தி க்கிறேன். அன்பு தவளும் முகம் முன் சிரிப்பு கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கடைப்பிடித்தல் .எல்லா மாணவரை யும்தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பிரம்புஎடுத்து அடிக்காதுபடிப்பிப்பார்.ஆங்கல மீடியத்தில் படிப்பில் தவர் தமிழில் அழகுறபௌதக விஞ்ஞானத்தை கற்பித்தார்.ஆங்கில மீடியம் நிற்பாட்டிய போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படிப்பித்த ஆசிரியர் கருணாகரனுடன் இணைந்து GCE(O/L)காலத்தால் அழியாதபொக்கிஷம் பெளதிகம் நூலை வெளியிட்டு அகில இலங்கஇரீதியாக சகலபாடசாலையிலும் படிப்பிக்க வைத்தார் தனது பெயரின் கீழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆசிரியர் என போட்டார்.இதனால் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு பெயர் விளங்க வைத்தார். பல இலச்சம் மானவர் கள் படித்து பயன் பெற்றார் கள். விளையாட்டுதுறைக்கும் சாரணியர் கழகத்திற்கும் விஞ்ஞானக்கழகத்திற்கும் காப்பாளராக இருந்தார். இவரது அயராத உழைப்பால் கா.பொ.த உயர் கல்வித்தரத்திற்குகுஅனுப்பினார். இவரிடம் கல்வி கற்ற மானவர்கள் இஞ்சினியராகவும் டாக்டர் களாகவும் ஆசிரியர்களாகவும் நல்ல நிலையில் தராதரமான உத்தியோகத்தர் களாகவும் நற்பிரசைகளாகவும் உள்ளார்கள். நல்லதொரு ஆசிரியர் அதிபர் கலைஞர் ஆசியரகவும் விளங்குகின்றனர். எல்லா மானவர்களையும் தன் பிள்ளைகள் போல் படிப்பித்து மானவர் உயர்வு க்கு தீபமாய் விளங்கினார்.இவரது அயராத உழைப்பால் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி தலை நிமிர்ந்து புகழைடைந்தது. இதனால் நானும் அவர் காட்டிய பாதையில் டாக்டராக விளங்கி எனது இரு பிள்ளைகளை டாக்டராக விளங்க வைத்தேன்.இங்கிலாந்தில் சைவ மகாநாடு தமிழ் மகாநாடு தேர் உற்சவம்களில் கண்டுமனமகிழ்ச்சி அடைந்துஆசீர்வாதம் பெற்றேன். சிறந்த ஆசிரியரை இழந்து தவிக்கிறது வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி. ஆசிரியர் அதிபர் கலைஞர் பத்மநாதன் BSC EPD.கல்வி கற்ற பழைய மாணவன் DR.K.S. திரவியராசா வட்டுக்கோட்டை கலைநகர் சித்தன் கேணி.