வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை முத்தையா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் , வவுனியா கச்சேரி திட்டமிடல் பணியக அதிகாரிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் பிரத்தியேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.