யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், London Hounslow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசர் நடராஜகுமாரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
London Ealing கனகதுர்க்கை அம்மன் ஆலயம், London East Ham ஸ்ரீ முருகன் ஆலயம், London Barnet நவக்கிரக ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி சுவாமி ஆலயம், London ஓம் சரவணபவ சேவா அறக் கட்டளை, UK யோகர் சுவாமிகளின் சிவ தொண்டன் நிலையம், மாதகல் நலன்புரிச்சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
RIP