யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா முருகதாஸ் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் கடைக்குட்டிச்சிங்கம் அம்மாவின் செல்லப்பிள்ளை துரை அவர்களின் மரணச்செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் தொலைபேசியூடாகவும் முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல்கள், அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் இறுதிக்கிரியை நிகழ்வில் வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்ட உறவினர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை நிகழ்வுகள் 19-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் நியுயோர்க் தீர்த்தக் கடலிலும் வீட்டுக்கிரியைகள் அவரது அக்காவின் இல்லத்திலும் நடைபெற்றுள்ளன.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 26-04-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது பிறந்து வளர்ந்த பண்ணாகம் இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.