1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மீனாட்சி லோகநாதன்
இறப்பு
- 24 FEB 2021
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
எட்டியாந்தோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மீனாட்சி லோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரு மாதம் கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
ஒருவருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது
ஆண்டுகள் ஒன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்