யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் கண்ணோடு இருந்தவர் மண்ணாகிப்போன வேளையில்
செய்வதறியாது நாம் துயரத்தில் நின்ற போது
தூரமிருந்தாலும் நேரத்தோடு துக்கம் விசாரித்து,
அன்போடு ஆறுதல் சொல்லி,
அனுதாபம் எனும் பரிவை காட்டி,
உடன் இல்லாவிட்டாலும்,
உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை உதிர்த்து,
உடனிருந்து உணர்வை தந்த நல் உள்ளங்களுக்கு
உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். குடும்ப உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.