Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1980
இறப்பு 29 APR 2021
அமரர் மயூரன் கந்தசாமி
வயது 40
அமரர் மயூரன் கந்தசாமி 1980 - 2021 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயூரன் கந்தசாமி அவர்கள்  29-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தசாமி றதிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதம், பவளம்(கச்சிலமடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தா(கனடா), செந்தூரன்(கனடா), செந்திலன்(வவுனியா), அமிர்தினி(துர்க்கா- ஆசிரியை, வ/இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயசீலன்(கனடா), டினோஜா(கனடா), அமுதன்(செலான் Bank முகாமையாளர்), சுகுமார்(அவுஸ்திரேலியா), ரேணுகா(வவுனியா), ராகினி(லண்டன்), ராகவன்(கச்சிலமடு), கேசவன்(பிரான்ஸ்), சிவகுமார்(கச்சிலமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திக், நிலவன், நிலக்‌ஷன், டன்னியஸ்ரீ ஆகியோரின் அன்பு தாய் மாமாவும்,

கனிஸ்கா அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று சாஸ்த்திரிக்கூழாங்குளம் இல்லதில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில்  நெடுங்கேணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ஊஞ்சல்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices