யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பொரளையை வதிவிடமாகவும், புரூணை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா சின்னையா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அஸ்தி உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் அஞ்சலிக்காக மார்கழி மாதம் 4ம் திகதி காலை 8.00 மணிக்கு அன்னாரின், 4, குணசேகர லேன், பொரள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, மாலை 2 மணிக்கு நல்லடக்க ஆராதனை வழிபாடுகளைத் தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் பொரளை பொது மயானதிற்கு (ரோமன் கத்தோலிக்க பகுதி) நல்லடக்கத்துக்காக எடுத்து செல்லப்படும்
Our deepest sympathies to Ravi, Lucky, Rohan, Valli and their loved ones. May Aunties soul rest in peace.