1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியநாயகம் புஸ்பராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்....
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு... ???
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்