Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 11 JUN 1938
மறைவு 01 OCT 2021
அமரர் மரிய அருளானந்தம் மரியறோஸ்
வயது 83
அமரர் மரிய அருளானந்தம் மரியறோஸ் 1938 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய அருளானந்தம் மரிய றோஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

”உயிர்ப்பும் உயிரும் நானே என்னில்
விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்”

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 30-10-2021 சனிக்கிழமை அன்று சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் காலை 07:30 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்படும் இரங்கற்திருப்பலியில் பங்கேற்று செபிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை மதிய போசன உணவிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.