யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம் பெரியபண்டி விரிச்சானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேற்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
நீங்களே எம் அப்பாவாக வரனும் என்று
தினம் இறை துதி பாடும் பிள்ளைகள்!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!
உங்கள் பிரிவால் வாடும் பாசமிகு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்..