

-
09 MAR 1940 - 10 JUN 2020 (80 வயது)
-
பிறந்த இடம் : புளியங்கூடல், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மனோகரன், சர்மிளா(இங்கிலாந்து), கல்பனா(இங்கிலாந்து), சோபிகா(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார்(இங்கிலாந்து), ஜெயாகரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொர்ணகாந்தி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், யோகபதி, காலஞ்சென்ற இராஜலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தருண், சஞ்ஜீவன், ஸ்ரீயா, அதிரன், அக்ஷயன், அன்விதா, அக்ஷரா, பிரியசி, ரித்தியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 11-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணிக்கு மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புளியங்கூடல், Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எமது அப்பாவின் இழப்பு செய்தி கேட்டு எம்முடன் இரங்கல் செய்திகளை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.