உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், கச்சேரியடி அரியாலையை வதிவிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் நாகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய் அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து பத்தாண்டு ஆன போதும் உமை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம் கனவாகிப் போனதுவோ! அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால் துடித்து பதை பதைத்த நினைவுகளை இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம் எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும் எங்கள் ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!