Clicky

16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 16 JAN 1927
உதிர்வு 03 JUN 2022
அமரர் மங்கையர்க்கரசி ஆறுமுகம் 1927 - 2022 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மாலைதீவு, சாம்பியா, தென் ஆப்ரிக்கா Transkei, பிரித்தானியா Windsor Slough, Preston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி ஆறுமுகம் அவர்களின் 16 ஆம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

“ அன்பின் ஊற்றாகி
எம்மை ஆளாக்கி வைத்தவரே
 ஆண்டு கோடி சென்றாலும்
 அழியாது உம் நினைவு “

16 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் கலைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், Dr. உமாபதி குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்