Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 MAR 1953
மறைவு 17 JUN 2022
அமரர் பழனிவேல் மகாலிங்கம் 1953 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, ஜேர்மனி Stuttgart Leinfelden-Echterdingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பழனிவேல் மகாலிங்கம் அவர்கள்  17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த பழனிவேல் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும், 

ரதீஸ்குமார்(கனடா), ரமேஸ்குமார்(லண்டன்), கௌசிகா(கனடா), அசோக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகதீஸ்வரி(கனடா), நளாஜினி(லண்டன்), ஜெயந்தகுமார்(கனடா), சகிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஒவியா, லஷ்சியா, றியா, நிதுஷன், உதிஸ்ரா, திலீபன், கேஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கமலா நல்லதம்பி(ஓய்வுபெற்ற ஆசிரியை- வல்லன் ஸ்ரீ சண்முகநாதன் வித்தியாசாலை), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், கணேசன் மற்றும் சுந்தரலிங்கம்(ஓய்வுநிலை திட்டமிடல் பணிப்பாளர்- திருகோணமலை மாவட்டம்), இந்திராணி ஜெயபாலசிங்கம், தேவநாயகி மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் மற்றும் ரூபகாந்தன், சிவகாந்தன், கலைமகள், சந்திரகாந்தன், ஜீவகாந்தன், ஜெயகாந்தன், வதனி ஆகியோரின் மைத்துனரும்,

ஸ்ரீதரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2022  செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 11ம் வட்டாரம் புங்குடுதீவு கிழக்கில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரத்தில் அமைந்துள்ள நாவுண்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அசோக்குமார் - மகன்
அருந்ததி - மனைவி
ரமேஸ்குமார் - மகன்
சகிலா - மருமகள்
சுந்தரலிங்கம் - சகோதரன்
ஜெயபாலசிங்கம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices