2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்து சென்றதம்மா- நீங்கள்
வாழ்ந்த நினைவுகளும் சுவடுகளும்- எம்
நெஞ்சில் நிறைந்து நிற்குதம்மா!
நிகரில்லாத எம் சுவாசமே தாயே- எங்கள்
மனம் தினம் தினம் ஏங்கும் உறவும் “அம்மா”
ஆறுதல் கூறவோ அணைத்துக் கொள்ளவோ
உம்மைப் போல் யாருமில்லையம்மா- உங்கள்
வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏதுமில்லை இவ்வுலகில்!
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர
என்றென்றும் எழிலோடு எம் நெஞ்சிலே நீங்கள் வாழ்வீர்கள்!
என்றும் உங்கள் நினைவில் மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
தகவல்:
பிள்ளைகள்