

யாழ். அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைப் (நிலாவில்) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் வின்சன் கோமகன் அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
மகேந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோய் ஞானவிழி(முகாமைத்துவ சேவை அலுவலகர்- வலிகாமம் வலயம்), ஞானசுதன்(Windforce உதவி பொறியியலாளர்- பளை வவுனியா), ஞானப்பிரியா(ஆசிரியை - கிளி பளை மத்திய கல்லூரி), ஞானகீதா(ஆசிரியை- மு/ வள்ளிபுரம் மகா வித்தியாலயம்), தேவசுதன்(மொரட்டுவ பல்கலைக்கழக கணிய அளவையியல் மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌசீகன்(புகையிரத நிலைய அதிபர் சுன்னாகம்), Dr. பிரியந்தி(யாழ். போதனா வைத்தியசாலை), சங்கீத்(உத்தியோகத்தர்- இலங்கை வாங்கி நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வின்சன் குணாளன்(ஓய்வுபெற்ற நூலகர்), காலஞ்சென்ற வின்சன் குலமகன், கோமதி, வின்சன் திருமகன், பாமதி, குலமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னமேரி நீடா, ஜெனிற்றா ஷாமினி, லிகோரி, ஷாமினி, கருணைதாஸ், தயாபரன் மற்றும் காலஞ்சென்ற தெய்வேந்திரராணி, சிவராஜலிங்கம்(ஓய்வுபெற்ற பிரதேச சபை செயலாளர்), சிவாநந்தலிங்கம் சிவச்செழியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தசாமி, சுபத்திரா, ஜெயவதி, ஜெயசாந்தரூபி ஆகியோரின் சகலனும்,
லெஷரா, அன்ஷயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவது இல்லத்தில் நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் அல்வாய் மெதடிஸ்த தேவாலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் பங்கு வேம்படி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.