உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டி வேலியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இன்பஇல்லம் வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் மச்சராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே உங்கள் அரவணைப்பில் இல்லறம் வாழ்ந்திருந்தோம் இன்று நாம் தவிக்கின்றோம் நீங்கள் இன்றி ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய் அப்பா....
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எட்டு ஆண்டுகள் நகர்ந்தாலும் உங்கள் நினைவு எமை விட்டு அகலாது...
நாங்கள் உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு நினைவே என்றும் நீங்கள் தான் வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாவும் என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!