யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
அன்பே சிவம் என
அழகு நிலவு என-நல்
பண்பே குணம் என
பாரிடை வாழ்ந்த மகான்
நெஞ்சிடை பிரிந்து
நெடுந்தூரம் அகன்று
விண்ணிடை விரைந்து
விலகிய பொழுதில்
எம்மோடு இருந்து உதவி புரிந்து,
ஆறுதல் கூறி அனுதாபம் வழங்கி,
நேரில் பங்கெடுத்து பரிவினைக் காட்டிய
நல் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவருக்கும்
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 27-02-2021 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்தி நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.