Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 12 FEB 1948
ஆண்டவன் அடியில் 01 DEC 2024
அமரர் குணரத்தினம் மகாலக்ஸ்மி 1948 - 2024 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் மகாலக்ஸ்மி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!

உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா

ஆண்டுகள் ஒன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!

எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்...

தகவல்: குடும்பத்தினர்

Photos