1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
18
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் , ஜேர்மனி Bad Wildungen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரவேலு உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனது அப்பா
மாநிலத்தில் நீங்கள் பிரிந்து!
தீராத துயரத்தில் தேம்புகின்றோம்
நாம் இங்கு!
வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வற்றாத ஊற்றாக வலி தந்த காயங்களுடன்
ஒவ்வொரு நாளும் இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.
நீங்கள் மறைந்த நாள் முதலாய்
நிம்மதி எங்களுக்கு இல்லை அப்பா!
நினைவிழந்து செயலிழந்து
நிற்கதியாய் நிற்கின்றோம் அப்பா!
என்றுமே நீங்கள் செலுத்திய அன்பும்
அரவணைப்பும் மாறாது எந்நாளும்
எங்கள் எல்லோரது உள்ளத்திலும்
நீங்கள் தெய்வமாய் வீற்றிருப்பீர்கள்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...