Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 APR 1954
இறப்பு 27 NOV 2025
திரு குமாரசாமி பரமானந்தம்
ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்களப் பணியாளர்
வயது 71
திரு குமாரசாமி பரமானந்தம் 1954 - 2025 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பரமானந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தந்தையே!
நாட்கள் 31 ஆனதுவே...
 ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

 நிழல் தந்து எமை வளர்த்து நிலைத்து
மண்ணில் வாழ வைத்து உறுதியுடன்
 எம்மைக் காத்த உத்தமனே

எங்கள் அன்புத் தெய்வமே!
 பூந்தோட்டத்தில் நல் மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே என்றும்
 அழியாத உம் பாசம் எம்மை விட்டு அகலாது

அப்பா காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும் கடந்து வந்த
பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்

ஆண்டவன் அருளால் அமைந்த வாழ்வு
வேண்டுதல் பெற்று விரைந்து காலம்
 நீண்டநல் அன்பின் நிலைத்த போதும்
 பூண்டவிப் பூமிவிட்டு பரமசிவதான் சேர்ந்ததேனோ

 அதிசய உறவு ஆளுமையில் வளர்வு
மதிவளர் கார்த்திகை மாண்புநிறை இருபத்து
 ஏழு பதிதரு சப்தமியில் பாசத்தின் பெரியோன்
துதியோடு நீள்துயிலாய் தூயதெய்வ தாள்சேர்ந்ததேனோ

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.