யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுறோட், இல 55/2, பழம் வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு இராசலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆகியும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
நாட்கள் 31ச் கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 5.00 மணியளவில் காரைநகர் ஆலங்கண்டடி அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 07-06-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
55/2,பழம் றோட்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
சித்தப்பா; எங்கள் அப்பு குடும்ப உறவுப்பாலம். அவரில்லாமல் எந்த ஓரு நிகழ்வும் நடந்ததில்லை! எனது திருமணத்தையும் தலைமை தாங்கி நடத்தி வைத்த என்னம்புக்குரியவர்! எப்பவும் "என்ன மாப்பிள்ளை" என்றழைப்பார்!...